About

ஜாதிக்காய் சாகுபடியில் லாபம் ஈட்டும் விவசாயிகள் @ கோவை

ஆனைமலை: தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிக அளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல், கேரளா வாடல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலால் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி ஆகியவற்றால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதிலிருந்து மீண்டு வர விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில், தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காயை விவசாயி கள் பயிரிட தொடங்கியுள்ளனர். இதனால் தென்னையில் இழந்த வருவாயை ஈடுசெய்ய முடியும் என நம்புகின்றனர்.

இதுகுறித்து ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் கூறியதாவது: ‘மிர்ஸ்டிக்கா ப்ராகிரன்ஸ்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜாதிக்காய், நறுமணமூட்டும் மரவகை ஆகும். ஜாதிக்காயில் இருந்து கொட்டை மற்றும் ஜாதிபத்ரி என்ற இரு நறுமண பொருட்கள் பெறப்படுகின்றன. ஜாதிக்காயின் தாயகம் இந்தோனேசியா என்றாலும், இலங்கை, இந்தியா, சீனா மற்றும் மலேசியாவில் அதிகளவில் பயிரிடப் படுகின்றது. இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 90 சதவீதம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் இப்பயிரானது தென்னையில் ஊடுபயிராக நடவு செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 4,540 டன் ஜாதிக்காய் கொட்டை தேவைப்படுகிறது. ஆனால் 2150 டன் மட்டுமே உற்பத்தி ஆகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: