
ஓசூர்: வேளாண் பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக அஞ்செட்டி பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அஞ்செட்டி, தேன்கனிக் கோட்டை, உரிகம் உள்ளிட்ட பகுதியில் பருவ மழையை நம்பி மானாவாரி நிலங்களில் கேழ்வரகு,கொள்ளு. துவரை, அவரை மற்றும் எண் ணெய் வித்து பயிர்களான எள்ளு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய் துள்ளனர். இதேபோல, மலைக் கிராமங்களில் நிலக்கடலை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில், உரிகம், கோட்டையூர், அஞ்செட்டி பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிருக்கு இந்தாண்டு ஓரளவுக்குப் பருவமழை கைகொடுத்துள்ளதால் நன்கு விளைந்து தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. இதனிடையே, வேளாண் பணிக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நிலக்கடலை அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment