
ராமநாதபுரம்: வெளி நாடுகளுக்கு மிளகாய் வத்தல் ஏற்றுமதி செய்து சாதனை படைத்த கமுதி பகுதி இயற்கை விவசாயி ராமருக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ராமர் (49). இவர் தனக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்த்து, இயற்கை விவசாய முறையில் மிளகாய் சாகுபடி செய்து, ஆண்டு தோறும் வெளி நாடுகளுக்கு மிளகாய் வத்தலை ஏற்றுமதி செய்து வருகிறார். கடந்தாண்டு ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment