
சென்னை: பஜாஜ் ஃபின்சர்வ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ‘பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்’ என்னும் புதிய நிதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து அந்நிறுவனம் கூறுகையில், “இந்தத் திட்டமானது நடத்தை அறிவியல் மற்றும் நிதி நுண்ணறிவு அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும். அதன்படி, நிதி ஒதுக்கீட்டைத் தீர்மானிப்பதற்கு நிறுவனங்களின் சந்தை போக்குகளை மட்டும் அடையாளம் காணாமல் அதன் நடத்தை அம்சங்களையும் இந்தத் திட்டம் பகுப்பாய்வு செய்யும். இதனால், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு சிறந்த வருவாயைப் பெற முடியும்” என்று தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment