
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் ஹலால் தர சான்று பெற்ற பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்த மாநில அரசு பிறப்பித்துள்ளது.
ஹலால் தர சான்றுடன் கூடிய உணவுப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதி ரீதியாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது அல்ல என அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனத்துக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment