
சென்னை: ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழாவில், 4 புதிய திட்டங்களை தமிழக அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார். ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில், வங்கியின் முதன்மை பொது மேலாளர் என்.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ‘ரெப்கோ-55’ என்ற 8.75 சதவீதம் வரை வட்டியுடன் கூடிய புதிய வைப்புத் தொகை திட்டத்தையும், ரூ.3 கோடி வரை தொழில் கடன் வழங்கக் கூடிய ‘ரெப்கோ ஃபெளக்ஸி ஓடி’ என்ற திட்டத்தையும், தாயகம் திரும்பியோருக்கு குறைந்த வட்டியில் இருசக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் வரையிலான கடன் திட்டம் மற்றும் வீடு சீரமைப்புக்கான சிறப்புக் கடன் திட்டம் ஆகிய 4 புதிய திட்டங்களை தொடங்கிவைத்தார்.
ரூ.1.42 கோடி ஈவுத் தொகை: பின்னர் அவர் பேசியதாவது: கடந்த 1969-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த வங்கியை தொடங்கி வைத்தார். அவரது நூற்றாண்டு விழாவில் இந்த 55-வது நிறுவன தின விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. ரெப்கோ வங்கியில் தமிழக அரசு 4.68 சதவீத மூலதனத்தை கொண்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் இந்த வங்கி ஈவுத் தொகையாக தமிழக அரசுக்கு ரூ.1.42 கோடி வழங்கி உள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 14 கிளைகளும், கேரளாவில் ஒரு கிளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 8 சதவீதம் வளர்ச்சி கண்ட இந்த வங்கி, நடப்பாண்டில் 9 சவீதமாக உயர்ந்து ரூ.19 ஆயிரம் கோடியை எட்டும். இதன்மூலம், ரூ.80 கோடி நிகர லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment