
கோவில்பட்டி: பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதி நிதி உதவி திட்டத்தின் கீழ் 15-வது தவணையாக ரூ.2000 விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாரத பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவித்தார். 5 ஆண்டு திட்டமான இதில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் கடைசி தவணையான 15-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் நேற்று (15-ம் தேதி) விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவுவைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment