
கோவை: பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் தமிழக ஜவுளித்தொழிலில் ஆண்டுதோறும் 115 லட்சம் பேல்கள் (ஒரு பேல் 170 கிலோ) பஞ்சு தேவைப்படும் நிலையில் 9 லட்சம் பேல்கள் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அரசு நடவடிக்கை எடுத்தால் 5 ஆண்டுகளில் தன்னிறைவு அடையலாம் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் விளங்குகிறது. தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மொத்தம் 2,300 நூற்பாலைகள் (ஓபன் எண்ட் நூற்பாலைகள் உட்பட) செயல்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற போதும், குறைவான பருத்தி விளைச்சல் இத்துறை வளர்ச்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment