
வேலூர்: கந்தனேரி மணல் குவாரியில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டதால், மணல் கிடைக்காமல் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், எம்-சாண்ட் கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதால் மணல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தனியார் கட்டுமான நிறுவனத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட அரும்பருதியில் கடந்த ஓராண்டாக இயங்கி மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கந்தனேரி கிராம பாலாற்றில் மணல் அள்ளும் பணி நடைபெற்று வந்தது. பொதுப்பணித்துறை இணையதளம் மற்றும் செல்போன் செயலி வழியாக முன்பதிவு செய்யப்படும் லாரிகளில் மணல் விற்பனை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment