
புதுடெல்லி: இந்திய அரசின் கோரிக்கையைஏற்று, 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படும் என ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அறிவித்துள்ளது. இதன்ஒரு பகுதியாக, வரும் நவம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ‘உலக உணவு இந்தியா, 2023’ என்ற பெயரில் கண்காட்சி நடை பெற உள்ளது.
இதுகுறித்து மத்திய உணவுபதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் கூறியதாவது. உலக உணவு இந்தியா கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இக்கண்காட்சியின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்பார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment