
கோவை: நீர் மூழ்கி டிரோன், ராணுவ தேவைக்கான ரோபோ உள்ளிட்ட அதி நவீன கண்டுபிடிப்புகள் உருவாக காரணமாக விளங்கும் கொடிசியா டிஃபன்ஸ் இன்னோவேஷன், அடல் இன்குபேஷன் மையத்தின் செயல்பாடுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.
கோவையில் நேற்று நடந்த மாபெரும் கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடிசியா டிஃபன்ஸ் இன்னோவேஷன், அடல் இன்குபேஷன் மையத்தை பார்வையிட்டார். நீர் மூழ்கி டிரோன், வெடிகுண்டு, தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதை கண்டறிய ராணுவத்துக்கு உதவும் ரோபோக்கள் உள்ளிட்ட அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment