
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி ஆபரணத்தங்கம் ஒரு பவுன் ரூ.46 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பிறகு விலை சிறிது சிறிதாக குறைந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்துரூ.5,510-க்கும்,பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கும் விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment