
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் மாதந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் டன் ஸ்டீல் (எஃகு) பல்வேறு விற்பனை நிறுவனங்களிடம் இருந்து நுகர்வு செய்யப்படும் நிலையில் பீளமேட்டில் செயல்பட்டுவந்த மத்திய அரசின் ஸ்டீல் விற்பனை நிறுவனம் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால் ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் செயல்படும் பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு மூலப்பொருட்களில் ‘ஸ்டீல்’ முக்கிய மூலப்பொருளாகும். பீளமேடு ரயில் நிலையம் அருகே மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ‘ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்’ (செயில்) நிறுவனத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சேமிப்பு கிடங்கு மற்றும் விற்பனை நடைபெற்று வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment