
ராமேசுவரம்: பாம்பன் கடற்பகுதியில் இருந்து பாம்பை போன்று தோற்றம் கொண்ட விலாங்கு மீன்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
பாம்பனில் தெற்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற விசைப் படகு மீனவர்கள் விரித்த வலையில் விலாங்கு மீன் ஒன்று சிக்கியிருந்தது. சுமார் 8 கிலோ எடையில் 8 அடி நீளம் கொண்ட மீனை பாம்பன் கடற்கரைக்கு மீனவர்கள் கொண்டு வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment