
திருச்சி: திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், 2024-ம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்க அக்.31-ம் தேதி கடைசி நாள் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திருச்சி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சி.மாலதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், 2024-ம் ஆண்டுக்கான உரிமத்தை அக்.31-ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இதற்கென தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment