
சேலம்: புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ஜவுளி ரகங்களுடன் கூடிய மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி சேலத்தில் நாளை தொடங்குகிறது, என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கைத் தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன், மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அளவிலான கைத் தறி கண்காட்சி சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல் நோக்கு அரங்கத்தில் நாளை (27-ம் தேதி) முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment