
திண்டுக்கல்: “ஆவின் பால் சந்தைப்படுத்துதலில் உள்ள பிரச்சினைகளை சீர்செய்ததன் மூலம் விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது” என திண்டுக்கல்லில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இன்று (அக்.7) பால் வளத்துறை ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பால் கொள்முதல் செய்யப்படும் இடம், பால் குளிரூட்டும் மையம், பசுந்தீன சாகுபடி நடைபெறும் பகுதியை ஆய்வு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment