
சிவகங்கை: சிவகங்கை அருகே இடைய மேலூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இயற்கை விவசாயத்தில் அத்திப் பழம் சாகுபடி செய்து அசத்தியுள்ளார். அத்திப்பழம் ஹீமோகுளோபினை அதிகரிக் கும், மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கும் நார்ச்சத்து மிகுந்த பழம். இது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இதை இடையமேலூரைச் சேர்ந்த அரசு என்பவர் தனது 60 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்துள்ளார். அதில் 224 அத்திப்பழ மரங்கள் வைத்துள்ளார்.
தினமும் 10 கிலோ வரை பறித்து விற்பனை செய்து வருகிறார். 300 முதல் 350 கிராம் வரை ரூ.100-க்கு விற்பனை செய்கிறார். இயற்கை முறையில் விளைவித்த பழம் என்பதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் இப்பழத்துக்கு மவுசு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment