
விழுப்புரம்: ரூ.1.60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இல்லாமல் விவசாயி கள் எளிதாக கடன் பெறலாம் என விழுப்புரம் வேளாண் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். மரக்காணம் வட்டாரம் எண்டியூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மரக்காணம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சரவணன் தலைமைதாங்கினார். மாவட்ட வேளாண்துணை இயக்குநர் பெரியசாமி விவ சாயிகளுக்கு கடன் அட்டைகளை வழங்கி பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இம்மாத இறுதியில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையைப் பயன்படுத்தி அந்தந்த பகுதி மண் வளத்துக்கு ஏற்ப நெல், சிறுதானி யங்கள், பயறு வகைகள், எண் ணெய் வித்துக்கள்,கரும்பு உள் ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திட வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment