
கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடியேற்றப்பட உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற கோரி, கோவை தொழில் துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னை சென்று அமைச்சர்களை சந்தித்த நிலையிலும் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து, கருப்பு கொடியேற்றும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment