
கோவை: ‘‘நிதியுதவி தேவைப்படுவோரை கண்டறிந்து உதவும் நோக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மேற்கொண்ட முயற்சி காரணமாக இன்று ஒரே நாளில் ரூ.3,749 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என்றுமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) மற்றும் மாநில அளவிலான வங்கிகள் கமிட்டி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) ஒருங்கிணைப்பு சார்பில் மாபெரும் கடன் உதவி வழங்கும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று (அக்.3) நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்து வங்கி கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியது: “இந்த முயற்சி ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பாக தொழில்கள் நடக்கும் இடங்களில் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் தொடங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment