
புதுடெல்லி: வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இந்திய இளைஞர்களை இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வலியுறுத்தியுள்ள நிலையில், உலகின் மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வெளியிட்ட ஆடியோ ஒன்றில், "உற்பத்தித் திறன் குறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலக அரங்கில் போட்டிபோட வேண்டுமானால் அதற்கேற்ப இந்திய இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான், ஜெர்மனி ஆகியவற்றில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டது" எனக் கூறி இருந்தார். அதிக நேரம் பணியாற்ற வேண்டும் எனக் கூறும் முதல் சிஇஓ இவர் அல்ல.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment