
நியூயார்க்: பணியிடங்களில் பெண்கள் தலைமைப் பதவிகளை அடைய விரும்பினாலும்கூட, அவர்களுக்கு ஆண் பணியாளர்கள் அளவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. 2002-ல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளில் இது தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையின்படி 2022-ல் சராசரியாக 100 ஆண்கள் மேலாளராக பதவி உயர்வு பெற்ற நிலையில், 87 பெண்கள் மட்டுமே மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அமெரிக்காவின் ஷெரில் சேண்ட்பெர்க்ஸ் லியான் ஆர்க் நிறுவனமும், மெக்கின்ஸி அண்ட் கோ நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டில் 100 ஆண்கள் மேலாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டபோது, 86 பெண்கள் அதே பதவி உயர்வைப் பெற்றனர். அத்துடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய மாற்றம் ஏதுமில்லாமல் 100-க்கு 87 என்றளவிலேயே சொற்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment