
புதுடெல்லி: மறு அறிவிப்பு வரும் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது.
சர்க்கரையின் விலை உள்நாட்டில் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தடை விதித்தது. இதில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment