
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். இந்த 9 மாத காலங்களில், 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
நிகழாண்டில் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டது. ஆனால், அதன்பின் தற்போது வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment