
அரூர்: மழைக்காலம் மற்றும் விலை வீழ்ச்சி காரணமாக அரூர் பகுதியில் தர்பூசணி பழங்கள் நிலத்திலேயே அழுகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் புது கொக்கராப்பட்டி, வாச்சாத்தி, தாதம்பட்டி, புதுப்பட்டி, இருளப்பட்டி, முத்தனூர், கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் தர்பூசணி ( பச்சை மற்றும் கிரண் ரகம் ) பயிரிடப்படுகிறது. வழக்கமாக கோடை சீசனுக்காக 350-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. சில விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயிரிடுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment